Monday, May 2, 2016

பட்ட காலிலே படும்.

03-08-2015
10:36

பிறந்த நாள் ஆகஸ்ட் 2,
புரண்ட நாளாகி விட்டது ,
   சிவசைலத்தில்.2 ம் தடவை ,
    கோவிலுக்குப் போகாமல் ,
     குளிக்க ஆறு நோக்கி ஓடுகையில்,
புல்தடுக்கி, பாதம் பிறல்ந்து,
முன்னோக்கி ஓடி, பாலன்ஸ்
    தவறி, விழுந்து எழுந்த வேளை,
     வலது தோள்மூட்டு நழுவியது.     
        அதிகமில்லை; ஆனாலும் கை
தூக்க இயலவில்லை, தோளுக்கு
    மேலே. வலி, வலிதாகிக் கொண்டே
        போக, ஆர்த்தோ டாக்டர்  இடம்,
           அறிவுரை வாங்கி  வீடடைந்தேன்,
                 அடுத்த நாள் லீவு போட்டேன்..
வானவூர்தி பயணம்.

08-08-2015
10:10

புரபெல்லர் சுழண்டது, காலை9:35,
புறப்பட்டே விட்டது, ஸ்பெசிஜெட்.
அரைமணி நேரம், திருச்சி காவேரி,
அடுத்த அரை அவர் சென்னையே.
பாலாற்றைக் கடந்து பறந்தது,10:20,
10 மணித்துளியில் வங்காளவிரிகுடா!
வட்டமிட்டது, கடலின் பக்கம்,
வந்தேவிட்டது, மீனம்பாக்கம் !
அடையாறு நெளிந்தோடுது அழகாக
அடுக்கு மாடி தெரியுது, அடுத்தாக.
கத்திபாரா பாலம், கண்ணுக்குக்
கவர்ச்சி, வாகனங்கள் வரிசையாய்
வந்து இறங்கும் அழகு, அடடாஅடடா,
வரவேற்றான், மகிழ்வுடன் மகனும்.
விமானநிலையம் இறங்க 11:00,
வீட்டையடைய மணியும் 12:00.
ஒரே மணிநேரம் விமானப் பயணம்,
ஒரு மணி நேரம் கார் பயணம், வீடு !